பட்டு வேட்டியுடன் யாழ்.கோட்டையை பார்வையிட்ட சீன துாதரக அதிகாரிகள்!

ஆசிரியர் - Editor I
பட்டு வேட்டியுடன் யாழ்.கோட்டையை பார்வையிட்ட சீன துாதரக அதிகாரிகள்!

தமிழர்களின் கலாச்சார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்.கோட்டையை சீன துாதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். 

யாழ்.கோட்டைக்கு நேற்றைய தினம் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட 

மூவர் நோில் சென்று கோட்டையை பார்வையிட்டிருந்தனர். இதன்போது அக்குழுவில் அடங்கிய பிரதிநிதி ஒருவரே இவ்வாறு பட்டு வேட்டியுடன் வருகை தந்திருந்தார்.

கடந்த காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீன தூதர் உள்ளிட்ட குழுவினர் பட்டுவேட்டியுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு