யாழ்.காரைநகர் - முல்லைப்புலவில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் - முல்லைப்புலவில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 5 பேர் கைது!

யாழ்.காரைநகர் - முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் 5 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி காவலரண் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 25 கிலோ கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 5பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு