யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் பொலிஸார் அதிரடி! 19 வயதான போதை வியாபாரி கைது, 5 ஆயிரம் மாத்திரைகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் பொலிஸார் அதிரடி! 19 வயதான போதை வியாபாரி கைது, 5 ஆயிரம் மாத்திரைகள் மீட்பு..

யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தொிவித்துள்ளனர். 

கைதான சந்தேகநபரிடமிருந்து சுமார் 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. 

அண்மைக்காலமாக ஆறுகால் மடம் பகுதியை மையமாக வைத்து இந்த போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு