யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் இ.போ.ச - தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் வழக்கம்போல் இன்றும் முறுகல்...

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் இ.போ.ச - தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கிடையில் வழக்கம்போல் இன்றும் முறுகல்...

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சேவையில் ஈடுபடும் இ.போ.ச - தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையில் இன்று காலை முறுகல் இடம்பெற்ற நிலையில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் ஸ்தம்பிதமடைந்தது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று(28) காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த 750 இலக்க வழித்தடம் பேருந்து சாரதியினை அச்சுவேலி பேருந்து நிலையத்தில் நின்ற ஒருவர் தாக்கியுள்ளார். 

இதனை அடுத்து குறித்த இ.போ.ச. பேருந்து பொலிஸ் நிலையம் எடுத்து செல்லப்பட்டு பாதிக்கப்பட்ட சாரதியினால் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகத்தில் இரண்டு தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை அச்சுவேலி பொலிசார் விசாரணைக்காக அழைத்து சென்றிருந்தனர். பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இதனையடுத்து சில மணிநேர இழுபறிக்குப் பின் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோல் இடம்பெற ஆரம்பித்துள்ளன. தொடர்ச்சியாக இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் தனியார் பேருந்தை செலுத்துபவருக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியால் 

வேகமாக பயணித்து இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் ஏற்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். பேருந்து சாரதிகள் பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து தமக்குள் போட்டி போட்டு ஓடுவதனைத் தடுத்து நிறுத்துவதற்கு 

உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு