யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யும் அவசியம் எனக்கில்லை! அதற்காக ஈ.பி.டி.பியின் தோளில் ஏறி ஆடவும் முடியாது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யும் அவசியம் எனக்கில்லை! அதற்காக ஈ.பி.டி.பியின் தோளில் ஏறி ஆடவும் முடியாது..

யாழ்.மாநகரசபையின் பதீட்டு விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் நோக்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு இல்லை எனவும் அதே சமயம் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடவும் விட முடியாது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் அனுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழமக்கள் ஜனநாயக கட்சி தமிழ் மக்களின் அபிவிருத்தி, அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து பயணித்துவரும் கட்சியாகும்.

அந்த வகையில் யாழ்.மாநகரசபையின் பாதீட்டை வைத்து அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எமக்கு கிடையாது. ஆனால் எமது கட்சியின் ஆதரவில்லாமல் பாதீட்டினை   நிறைவேற்றவும் முடியாது.

கடந்த வாரம் யாழ்.மாநகர சபையின் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது நாம் அதில் பங்கு கொள்ளவில்லை அதற்கு பல காரணங்கள் உண்டு. மாநகர முதல்வர் தெரிவில் எமது கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் 

சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி விடையங்களில் எமது கட்சி புறக்கணிக்கப்படுகிறது. மாநகர சபையில் ஆதிக்கமுள்ள எமது கட்சி மீது தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் 

தொடர்ந்தும் ஈ.பி.டி.பி யின் தோளில் ஏறி ஆடுவதற்கு விடமுடியாது. ஆகவே யாழ்.மாநகர சபையின் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பது தொடர்பில் என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை பேசவில்லை. 

கட்சி அங்கத்தவர்களுடன் பேசினார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு