யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அபாயம் உச்சம்! 9 மரணங்கள் பதிவு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அபாயம் உச்சம்! 9 மரணங்கள் பதிவு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் டெங்கு காய்ச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இதுவரையில் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். 

மாவட்டத்தின் டெங்கு நிலைமைகள் தொடர்பாக நேற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்வடாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்டபோக்குவரத்து காரணமாக 

குறித்த இரண்டு வருடங்களிலும் மிகக் குறைந்தளவு டெங்கு நோயாளர்களே இனங்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்த வருடத்தில் இன்றுவரையான காலப்பகுதியிலே யாழ்.மாவட்டத்திலே 3294 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 9 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் ஒப்பிட்டு பார்க்கும்போது நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

அக்டோபர் மாதத்தில் யாழ்.மாவட்டத்தில் 237 நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 367 நோயாளர்களும் டிசம்பர் மாதத்தில் 570 நோயாளர்களும் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளார்கள். 

குறிப்பாக கடந்த இரண்டு வாரகால பகுதியிலே சடுதியான அதிகரிப்பை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கடந்த பல வருடங்களிலே சில வருடங்களில் டெங்கு நோய்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் 

இறப்புக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 9 இறப்புகள் காணப்படுவது மிக கூடிய ஒரு அதிகரிப்பதாக காணப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு