யாழ்.பல்கலைகழகத்தில் மார்கழிப் பெருவிழா நேற்று ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் மார்கழிப் பெருவிழா நேற்று ஆரம்பம்..

யாழ்.இந்தியத் துணைத் தூதரகம்  - நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. 

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இலங்கை கலைஞர்கள் இந்திய கலைஞர்கள் இணைந்து தங்களுடைய கலைத் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. இன்று(28) மற்றும் நாளை (29) மார்கழிப் பெருவிழா தொடர்ந்து இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட அரசியல் சிவில் சமூக வர்த்தக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு