வடமாகாண பிரதம செயலாளர் அல்லது யாழ்.மாவட்டச் செயலர்! இரண்டில் ஒரு பதவியே வேண்டும், பெண் அதிகாரியின் விருப்பம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாண பிரதம செயலாளர் அல்லது யாழ்.மாவட்டச் செயலர்! இரண்டில் ஒரு பதவியே வேண்டும், பெண் அதிகாரியின் விருப்பம்...

யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் பதவி உயர்வுபெற்று செல்லவுள்ள நிலையில் அடுத்து யாழ்.மாவட்டச் செயலராக நியமிக்கப்படலாம். என கூறப்படும் பெண் அதிகாரி ஒருவர் தனக்கு வடமாகாண பிரதம செயலாளர் அல்லது யாழ்.மாவட்டச் செயலர் பதவி வழங்கப்படவேண்டும் என கேட்பதாக கூறப்படுகின்றது. 

குறித்த பெண் அதிகாரி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில் வடக்கு பிரதம செயலாளராக வருவதற்கே அதிக விருப்பம் கொண்டுள்ளதாக உள்வீட்டு தகவல்கள் தொிவிக்கின்றன. 

ஏனெனில் மத்திய அமைச்சு ஒன்றின் செயலாளர் பெறும் சம்பளமே மற்றும் மாகாண பிரதம செயலாளருக்கும் வழங்கப்படுகிறது. அரசாங்க அதிபராக இருந்து ஓய்வு பெற்றால் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில் துண்டு விழுமாம். 

இவ்வாறான நிலையில் வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வுடன் வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் குறித்த பெண் அதிகாரி. தற்போது வடக்கு மாகாண பிரதம செயலாளராக உள்ள சமன் பந்துள சேன தனது சொந்த மாகாணத்திற்கு செல்வதற்கு அதிகம் விரும்பும் தொிவித்துள்ளார். 

தற்போது 10 - 15 வரையிலான அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறும் நிலையில் வடமத்திய மாகாண பிரதம செயலாளர் அமைச்சின் செயலாளராக சென்றால் தற்போதுள்ள வடமாகாண பிரதமர் செயலாளர் அந்த இடத்தை பெறுவதற்கு தயாராக உள்ளார்.

அவ்வாறு இடம்பெற்றால் தமக்கு வடமாகாண பிரதம செயலாளர் பதவியை வழங்குமாறும் இல்லாவிட்டால் யாழ்.மாவட்டச் செயலர் பதவிவை வழங்குமாறு குறித்த பெண் அதிகாரி தொிவுகளை முன்வைத்துள்ளாராம். 

ஏனெனில் குறித்த பெண் அதிகாரியுடன் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் நிமித்தம் அவர் தொடர்ந்தும் வடமாகாணத்திலேயே இருக்கும் தேவை உள்ளதாகவும் அதனாலேயே ஒன்றில் பிரதம செயலாளர் அல்லது யாழ்.மாவட்டச் செயலர் பதவி தமக்கு வழங்குமாறு கேட்பதாக தகவல். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு