யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிரியாவிடை!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பிரியாவிடை!

யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு இன்று யாழ்.பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய விஜித குணரட்ண கடந்த 38 வருட கால பொலிஸ் சேவையினை இன்றுடன்

நிறைவு செய்து ஓய்வு நிலைக்கு செல்கின்ற நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் அவருக்குரிய பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்.பொலிஸ் நிலைய மைதானத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் ஆரியகுளம் சிறீ நாகவிகாரையின் விகாராதிபதி,

ஏனைய மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதோடு 

ஓய்வு பெற்று செல்லும் பொலிஸ் மா அதிபருக்கு நினைவு பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது, 

குறித்த நிகழ்வில் யாழ்,காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள். 

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ் மாவட்டபொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு