ஓடிக் கொண்டிருந்த வாகனத்திலிருந்து குதித்த 15 வயது சிறுமி பலி! மற்றொரு சிறுவன் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
ஓடிக் கொண்டிருந்த வாகனத்திலிருந்து குதித்த 15 வயது சிறுமி பலி! மற்றொரு சிறுவன் படுகாயம்..

ஓடும் வாகனத்திலிருந்து குதித்த 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கடந்த 23ம் திகதி காலை முறிப்பிலிருந்து குறித்த மாணவியும் இன்னொரு மாணவனும் வீதியால் சென்ற வாகனத்தை மறித்து அதன் பின்னால் ஏறியுள்ளனர். 

பின்னர் இறங்கவேண்டிய இடம் வந்தபோது வாகனம் அங்கு நிற்காமல் சென்றுள்ளது. இதனையடுத்து மாணவியும், மாணவனும் வாகனத்திலிருந்து குதித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் வாகன சாரதிக்கு தொியாது என கூறப்படுகின்றது. 

இந்நிலையில் தலையில் படுகாயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மீண்டும் முல்லைத்தீவுக்கு மாற்றப்பட்ட நிலையில், 

நேற்றுமுன்தினம் மாணவி உயிரிழந்துள்ளதுடன், மாணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு