மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கியதில் துாக்கி வீசப்பட்ட தாயும், மகளும்! தாய் உயிரிழப்பு, மகள் படுகாயம், யாழ்.கோப்பாயில் பயங்கரம்...

ஆசிரியர் - Editor I
மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கியதில் துாக்கி வீசப்பட்ட தாயும், மகளும்! தாய் உயிரிழப்பு, மகள் படுகாயம், யாழ்.கோப்பாயில் பயங்கரம்...

கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கியதால் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். 

யாழ்.கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த சோதிலிங்கம் நாகேஸ்வரி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நத்தார் வழிபாட்டிற்காக இருபாலை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று மகளுடன் மோட்டார் சைக்கிள் பின் இருக்கையில் அமர்ந்து வீடு நோக்கி சென்ற வேளை, 

தாயின் சாறி மோட்டார் சைக்கிள் பின் சில்லுக்குள் அகப்பட்டுக்கொண்டதால் , தூக்கி வீசப்பட்டார். அதேவேளை மகளும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தமையால் விழுந்து காயங்களுக்கு உள்ளானார்.

விபத்துக்கு உள்ளானதில், தாயும், மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 மகள் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு