யாழ்.ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவிலை சேர்ந்த இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவிலை சேர்ந்த இருவர் கைது!

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின்போது சுமார் 18 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 1000 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆனைக்கோட்டை மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 24 வயது மற்றும் 25 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு