ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் நினைவு நாள் இன்று! 18 வருடங்கள் நிறைவு...

ஆசிரியர் - Editor I
ஆழிப்பேரலையில் உயிரிழந்தோரின் நினைவு நாள் இன்று! 18 வருடங்கள் நிறைவு...

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 18 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இந்நாளில் உயிரிழந்த மக்களுக்காக நாட்டின் பல பாகங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. 

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 லிருந்து 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை வேளை சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005ம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு