யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - தும்பளையில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி!

யாழ்.பருத்தித்துறை - தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். 

நேற்று மாலை 4 மணியளவில் தும்பளை - செம்மண்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

வீட்டின் மதிலில் ஏறி நின்றபோது மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த நிலையில், 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் , அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு