'வாரிசு' பட விழாவில் பரபரப்பு!! -ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு; காயமடைந்த பொலிஸ் அதிகாரி-

ஆசிரியர் - Editor II
'வாரிசு' பட விழாவில் பரபரப்பு!! -ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு; காயமடைந்த பொலிஸ் அதிகாரி-

தளபதியின் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் உள்நுழைவது தொடர்பாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக தைப்பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் படையெடுத்து நேரு அரங்கில் குவிந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள், பெரும் புள்ளிகளும் கலந்துகொள்கின்றனர். 

இந்த நிலையில் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் உள்நுழைவது தொடர்பாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .மேலும் பலரும் அரங்குக்கு வெளியேவும் காத்திருக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு