ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன சாம் கர்ரன், கேமரூன் கிரீன்

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன சாம் கர்ரன், கேமரூன் கிரீன்

ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை நடந்தது. 

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. 

இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல் அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை 17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐ.பி.எல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

இதன்படி சாம் கர்ரன் 18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்), கேமரூன் கிரீன் 17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்), பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்), ஹாரி புரூக் 13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), ஜேசன் ஹோல்டர் 5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு