யாழ்.புத்துார் - வாதரவத்தையில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் - வாதரவத்தையில் ஆடு மேய்க்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்.அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்துார் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார். 

நேற்றைய தினம் மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சேர்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் இன்று காலை ஆகியும் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு