கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரமாண்ட வரவேற்பு

ஆசிரியர் - Editor II
கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரமாண்ட வரவேற்பு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி பிரான்சை வீழ்த்தியது. 

36 வருடங்களுக்கு பின் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தலைநகர் பியுனஸ் அயர்சில் ரசிகர்கள் திரண்டு வந்து தங்கள் நாட்டு கால்பந்து அணியின் வெற்றியை மிகவும் உற்சாகத்துடன் தொடர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.

அங்குள்ள மைய சதுக்கத்தில் அர்ஜென்டினா ரசிகர்கள் ஒன்று கூடினார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் தலைகள் தெரியும் அளவுக்கு மக்கள் அலைகடலென திரண்டு இருந்தனர். தங்கள் நாட்டுக்குரிய பாடலை பாடியவாறு உற்சாகம் அடைந்தனர். மெஸ்சி, மெஸ்சி என்று கோஷம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. 

வெற்றி கொண்டாட்டத்தில் இலட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் தாயகம் திரும்பினார். அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

வழி நெடுகிலும் இலட்சக்கணக்கான ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  வீதிகளின் இரு புறங்களிலும் ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு