யாழ்.சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியன்மார் ஏதிலிகளுக்கு 19 லட்சம் பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்கிய “மெசிடா” அமைப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியன்மார் ஏதிலிகளுக்கு 19 லட்சம் பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்கிய “மெசிடா” அமைப்பு..

யாழ்.சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மியன்மார் நாட்டு ஏதிலிகளுக்கு “மெசிடா” அமைப்பு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊடாக வழங்கியுள்ளது. 

"மெசிடோ" நிறுவனத்தின் இயக்குனர் யாட்ஸ்சன் பிகிறாடோ தலைமையில் அமைப்பின் பிரதிநிகள் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் சிறைச்சாலையில் வைத்து மேற்படி உதவிப் பொருட்களை வழங்கினர்.

அண்மையில் கட்டைக்காடு கடற்பரப்பை அண்மித்த கடலில் தத்தளித்த படகிலிருந்து சுமார் 105 மியான்மர் ஏதிலிகள் கடற் படையினரால் மீட்கப்பட்டனர். 

அவர்களை யாழ் சிறைச்சாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், 

பால்மா வகைகள், ஆடைகள், சவக்கார வகைகள் உட்பட அவசர தேவை பொருட்களை குறித்த நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு