ரோஹிங்கியா ஏதிலிகள் காப்பாற்றப்பட்டமைக்கு இலங்கை கடற்படை மற்றும் பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ள UNHCR!

ஆசிரியர் - Editor I
ரோஹிங்கியா ஏதிலிகள் காப்பாற்றப்பட்டமைக்கு இலங்கை கடற்படை மற்றும் பொதுமக்களுக்கு நன்றி கூறியுள்ள UNHCR!

யாழ்.வடமராட்சி கிழக்கு கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகளை மீட்டமையினை UNHCR வரவேற்றுள்ளதுடன், கடற்படைக்கும், பொதுமக்களுக்கும் நன்றிகளையும் தொிவித்துள்ளது. 

ஆசியா பசுபிக்கிற்கான UNHCR  இயக்குநர் இந்திக ரத்வத்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு UNHCR அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது. 

படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பு சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரைஇறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு அருகில் வங்களா விரிகுடாவில் இன்னுமொரு படகு தத்தளிக்கின்றது என்ற தகவல் குறித்து ஐநா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு