தனியார் காணியில் மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

ஆசிரியர் - Editor I
தனியார் காணியில் மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!

யாழ்.நீர்வேலி வடக்கில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர். 

நீர்வேலி இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த கழிவு கொட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். 

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் கோப்பாய் பொலிசார் விரைந்து சட்டவிரோதமாக கழிவகற்றிய வாகனத்தினை 

பாதுகாப்பாக மீட்க முயற்சித்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு