யாழ்.மறைமாவட்ட ஆயருடன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூது குழு சந்திப்பு...!

ஆசிரியர் - Editor I
யாழ்.மறைமாவட்ட ஆயருடன் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் தூது குழு சந்திப்பு...!

யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழுவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. பிரான்ஸ், பஹ்ரைன், வியட்னாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், அவுஸ்திரேலியா,  

ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்கு புதிதாக இலங்கையால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்த சந்திப்பில் ஈடுபட்டது. 


இதன்போது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தூதுவர் குழு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு