கெட்டவார்த்தை பேசியதாக கூறி முன்பள்ளி சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர்! சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி...

ஆசிரியர் - Editor I
கெட்டவார்த்தை பேசியதாக கூறி முன்பள்ளி சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர்! சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி...

முள்ளியில் கல்வி கற்கும் சிறுவனுக்கு வாயில் சூடு வைத்த ஆசிரியர் தொடர்பான சிறுவனின் பெற்றோர் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு