அரை இறுதியில் தோல்வி!! -வன்முறையில் இறங்கிய மொரோக்கோ ரசிகர்கள்-

ஆசிரியர் - Editor II
அரை இறுதியில் தோல்வி!! -வன்முறையில் இறங்கிய மொரோக்கோ ரசிகர்கள்-

பிரான்ஸ் அணியுடன் நடந்த அரையிறுதிப் போட்டியில் தோல்விடைந்தால் பொலிஸார் மீது பட்டாசு மற்றும் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட மொரோக்கோ அணியின் ரசிகர்கள்.

கத்தாரில் நடந்த உலக கோப்பை கால்பந்து அரை இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியிடம் மொராக்கோ அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத மொராக்கோ ரசிகர்கள் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் வன்முறையில் இறங்கினார்கள்.

பிரான்சில் பொலிஸார் மீது அவர்கள் கற்களை வீசினார்கள். பெல்ஜியத்தில் பொலிஸார் மீது மொராக்கோ ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தி போட்டும் வாகனங்களுக்கு தீ வைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அந்த பகுதி முழுவதும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. இந்த வன்முறைகளை தடுத்த போது பொலிஸாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறையை அடக்க கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு