மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

ஆசிரியர் - Editor II
மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்ததுள்ளது பிரான்ஸ் அணி.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமாக 2 ஆவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. 

அல்பேத் ஸ்டேடியத்தில் ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னாண்டஸ் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். பதில் கோல் அடிக்க மொராக்கோ வீரர்கள் தீவிரமாக முயன்றனர்.

எனினும் அவர்களது முயற்சிகள் வெற்றி பெறவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2 ஆவது பாதி ஆட்டத்தின் 79 ஆவது நிமிடத்தில் மற்றொரு பிரான்ஸ் வீரர் கோலோ முவானி தனது அணிக்கான 2 ஆவது கோலை அடித்தார். 

இதனால் பிரான்ஸ் வெற்றி உறுதியானது. கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதையடுத்து 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலக கோப்பை தொடரில் 4 ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு