யாழ்.புலோலி சாரையடி பகுதில் வீடு உடைத்துக் கொள்ளை! 4 பேர் திருட்டு நகைகளுடன் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புலோலி சாரையடி பகுதில் வீடு உடைத்துக் கொள்ளை! 4 பேர் திருட்டு நகைகளுடன் சிக்கினர்..

வீட்டில் ஆட்கள் இல்லாத சமயம் வீட்டை உடைத்து சுமார் 14 பவுண் தங்க நகைளைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. 

புலோலி சாரையடிப் பகுதியில் கடந்த 7ம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொகக்கப்பணம் என்பன திருடப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கு 

இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றமைக்கு அமைவாக, நேற்று புதன்கிழமை (14) குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் SI.விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் தங்கநகையும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. 

விசாரணையின் பின்னர், இன்று(15) நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு