ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த 3 வார்த்தைகள்

ஆசிரியர் - Editor II
ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த 3 வார்த்தைகள்

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதால் வேதனையில் உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாவில் பதிவிட்ட அந்த மூன்று வார்த்தைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கால்பந்தில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் இருந்து தனது அணி வெளியேறியதை அடுத்து சோகத்தில் உள்ளார். 

இந்நிலையில் தற்போது தான் இருக்கும் நிலையை யதார்த்தத்தின் 3 அம்சங்கள் என மூன்று வார்த்தைகளில் விவரித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில், ''Pain (வலி), Uncertainty (உறுதியற்ற நிலை) And Constant work (தொடர்ந்து வேலை)'' எனப் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு எளிதில் பொருள் புலப்படாத இந்த மூன்று வார்த்தைகளில் தனது தற்போதைய நிலையை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுக்கல் வெளியேறியதை வலி என பதிவிட்டுள்ளதாகவும், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகிய நிலையில் மாற்று கிளப்பை இன்னும் தேர்வு செய்யாத நிலையை நிலையற்ற தன்னை என பதிவிட்டுள்ளதாகவும், என்னவாக இருந்தாலும் தொடர்ந்து தனது பணியை செய்ய வேண்டும். அதன் மூலம் தன்னை மேம்படுத்தி சிறந்த கிளப்பிற்கு செல்ல வேண்டும் என்பதை தொடர்ந்து வேலை என பதிவிட்டுள்ளதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு