யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உட்பட 4 பேர் வாள்களுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உட்பட 4 பேர் வாள்களுடன் கைது!

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளட்ட 4 பேர் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் வாள்கள் மற்றும், கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட நால்வரையும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களையும் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிசாரிடம் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் கையளித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு