கனடாவில் தமிழ் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!! -திடீர் கோடிஸ்வரயானார்-

ஆசிரியர் - Editor II
கனடாவில் தமிழ் பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!! -திடீர் கோடிஸ்வரயானார்-

கனடாவில் வசிக்கும் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் அதிர்ஸ்டலாப சீட்டுழப்பின் ஊடாக மிகப் பெருந்தொகையான பணப்பரிசை வெற்றி கொண்டுள்ளார். 

அந்நாட்டின் ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் (வயது 47) என்ற 3 குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக அதிஸ்டலாப சீட்டு எடுத்து வந்த நிலையில் அண்மையில் லொட்டோ 6ஃ49ல் இரண்டாம் பரிசாக 54,885 டொலர்கள் (ரூபா 1,47,03,551.36) பணப்பரிசை வென்றுள்ளார்.

இவ்விடயம் குறித்து சீலாவதி தெரிவிக்கையில்:-

நான் வாங்கிய லொட்டரிக்கு பரிசு விழுந்ததா என பார்த்தேன். அப்போது எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்கையில் 'பிக் வின்னர்' என பார்த்தபோது, மிகவும் உற்சாகமடைந்தேன். என் உடலே நடுங்கியது. உடனடியாக என் மகனிடம் இந்த மகிழ்ச்சி தகவலை சொன்னேன். எங்கள் இருவராலும் இதை நம்ப முடியவில்லை.

பரிசு பணத்தை வைத்து உடனடி திட்டங்கள் எதுவும் போடவில்லை, இருப்பினும் குடும்பத்தாருக்கு உதவ திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு