யாழ்.மானிப்பாயில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார்! இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாயில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார்! இருவர் கைது..

யாழ்.மானிப்பாய் பகுதியில் சுமார் 2400 கிலோ மஞ்சளுடன் இருவர் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

தமிழகத்திலிருந்து 2400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பயணித்த வாகனமொன்றை பொலிசார் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது. 

சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. இரண்டு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் 

மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று (13) முற்படுத்த மானிப்பாய் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு