சீரற்ற காலநிலையினால் யாழ்.குருநகர் மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்!

ஆசிரியர் - Editor I
சீரற்ற காலநிலையினால் யாழ்.குருநகர் மீனவர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்!

மண்டாஸ் புயலினால் உருவான சீரற்ற காலநிலையினால் யாழ்.குருநகர் பகுதி கடற்றொழிலாளர்களின் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைநதுள்ளதாக மீனவர்கள் தொிவித்திருக்கின்றனர். 

மண்டூஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகு இவ்வாறு அலையினால் அடித்து சேதமடைந்துள்ளது. அத்துடன் ஒரு படகு முற்றாக கடலில் மூழ்கியுள்ளது.

இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். முப்பதுக்கு மேற்பட்ட மீனவர்களின் படகுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன் அவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் சேமடைந்த படகுகளை திருத்துவதற்கான பொருளாதார ரீதியாக தம்மிடம் வசதி இல்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே அரசாங்கம் தங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென அவர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு