யாழ்.அச்சுவேலியில் சைக்கிள் கடையை உடைத்து திருடர்கள் கைவரிசை!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் சைக்கிள் கடையை உடைத்து திருடர்கள் கைவரிசை!

யாழ்.அச்சுவேலி - தென்மலை பகுதியில் சைக்கிள் திருததும் கடையை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. திருத்தும் நிலையத்தின் முன் கதவினை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் துவிச்சக்கர வண்டி 1. ஜந்து ரயர்கள் பெட்டியில் இருந்த பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

இன்று காலை கடையினை திறந்த பொழுது களவு போனமை தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பாரதி வீதி பகுதியினை சேர்ந்த கடை உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு