வடமராட்சி கிழக்கு மீனவா்களால் வெளியேற்றப்பட்டாா் மவை சோ.சேனாதிராஜா..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு மீனவா்களால் வெளியேற்றப்பட்டாா் மவை சோ.சேனாதிராஜா..

தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள், அது குறித்து நாடாளுமன்றில் பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளதேவையில்லை. எனக்கூறி நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா மீனவர்களால் வெளியேற்றப்பட்டுள்ளார். 

யாழ்.வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று யாழ்.நகரில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா

கலந்து கொண்டிருந்தார். இதன்போது மக்கள் போராட்டத்தில் அரசிய ல்வாதிகள் வேண்டாம் எனவும், தென்பகுதி மீனவர்களை எமது மண்ணிலிருந்து வெளியேற்ற இயலாதவர்கள், தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றில் ஒரு வார்த்தை 

கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டங்களின் கலந்து கொள்ள கூடாது. ஆனாலும் இவர்கள் கலந்து கொள்வது தங்களுடைய அரசியல் லாபங்களுக்காகவே என கோஷமி ட்ட மீனவர்கள், அடுத்த மாகாணசபை தேர்தல் நெருங்கும் நிலையில் 

தேர்தலுக்காக மக்களுடைய போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். எனவும் கோஷமிட்ட துடன், அரசியல்வாதிகளே வெளியேறுங்கள் என தொடர்ச்சியாக கோஷமிட்டனர். இதனைய டுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜர் 

வெளியேறி சென்றுவிட்டார். இதன் பின்னரும் அரசியல்வாதிகள் போராட்டத்தில் கலந்து கொ ள்ள தேவையில்லை. எனவும் அவர்கள் தங்களால் முடிந்ததை செய்யவேண்டும். எனவும் மீனவர்கள் கூறிவந்தார்கள் ஆயினும் சில அரசியல்வாதிகள் 

போராட்டத்தில் தொடர்ந்தும் கலந்து கொண்டார்கள். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு