பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த பெண் திடீரென வீதியில் விழுந்து உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த பெண் திடீரென வீதியில் விழுந்து உயிரிழப்பு!

பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் வெல்லாவெளி - தும்பக்கேணி 40ம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. பெரிய கல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை பெரிய கல்லாறில் இருந்து 40ஆம் கிராமத்திற்கு பஸ்ஸில் வந்திறங்கி மயான வீதியால் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே அவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று காலையே அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தினை கண்டு பிரதேச கிராம சேவையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடுமையான குளிர் மற்றும் மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் அதன் காரணமாக குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு