யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 31 வீடுகள் சேதம், 142 பேர் பாதிப்பு, மழை தொடரும்! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 31 வீடுகள் சேதம், 142 பேர் பாதிப்பு, மழை தொடரும்! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு..

யாழ்.மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் சுமார் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் கூறியுள்ளார். 

மேலும் 38 குடும்பங்களைச் சேர்ந்த142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2 சிறுதொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாயில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையம், உடுவில் பகுதியில் உள்ள புற்றுநோய் பராமரிப்பு நிலைய பெண்கள் விடுதியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் 

குறிப்பாக நல்லூர், பருத்தித்துறை, ஊர்காவற்துறை, கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளது. 

மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை வரை எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் தமக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு