உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி போட்டி இன்று ஆரம்பம்!! -முதல் போட்டியில் பிரேஸில் -குரோஷியா மோதல்-

ஆசிரியர் - Editor II
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி போட்டி இன்று ஆரம்பம்!! -முதல் போட்டியில் பிரேஸில் -குரோஷியா மோதல்-

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடரில் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள எட்டு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. 

நொக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, ஆர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா, பிரேஸில், மொராக்கோ, போர்த்துக்கல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் காலிறுதியில் குரோஷியா, பிரேஸில் அணிகள் மோதுகின்றன.

நாளை 10 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2 ஆவது காலிறுதியில் மொராக்கோ, போர்த்துக்கல் அணிகளும், நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் 3 ஆவது காலிறுதியில் நெதர்லாந்து, ஆர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன.டிசம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் நான்காவது காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு