துருக்கி பாராளுமன்றத்தில் மோதிக் கொண்ட எம்.பிக்கள்!! -ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
துருக்கி பாராளுமன்றத்தில் மோதிக் கொண்ட எம்.பிக்கள்!! -ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி-

துருக்கி பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இடையே நேற்று புதன்கிழமை நடந்த கடும் மோதலில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துருக்கி நாட்டின் பாராளுமன்றத்தில் நேற்று பாதீடு தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி தையிப் எர்டோகன் தலைமையிலான ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

அப்போது ஆளும் ஏகேபி கட்சியை சேர்ந்த ஜாபர் இசிக் என்கிற உறுப்பினர், குட் கட்சியின் உறுப்பினரான உசைன் ஓர்சின் முகத்தில் குத்தியுள்ளார். 

இதில் 58 வயதான உசைன் நிலைகுலைந்து வீழ்ந்துள்ளார். இதை தொடர்ந்து உசைன் ஓர்ஸ் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு