வெளிநாடு செல்லும் ஆசையில் 56 லட்சத்தை இழந்த யாழ்.மாவட்ட இளைஞர்கள்! பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
வெளிநாடு செல்லும் ஆசையில் 56 லட்சத்தை இழந்த யாழ்.மாவட்ட இளைஞர்கள்! பொலிஸ் மா அதிபருக்கும் முறைப்பாடு..

வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாண இளைஞர்கள் பலர் நீர்கொழும்பில் உள்ள முகவர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாக பாதிக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியை சேர்ந்த த.தர்மதாஸ் என்ற இளைஞர் கூறியுள்ளார். 

 யாழ்.ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை(07) ஊடகங்களை சந்தித்து அவர் இதனை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் குறிப்பிட்டதாவது, 

வெளிநாட்டுக்கு செல்வதற்காக முப்பதுக்கும் மேற்பட்ட யாழ்.மாவட்ட இளைஞர்கள் நீர்கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியிலுள்ள முகவரிடம் 56 இலட்சம் ரூபா பணத்தை வழங்கினோம். 

பல தடவைகள் நாம் கொழும்புக்கு சென்றபோதும் எம்மை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் முகவர்கள் அலைக்கழித்தனர். 

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது எம்மை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். ஆகவே பணத்தை மீட்டுத்தர உதவவேண்டும் என்றார்.

மேலும் இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு