தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி!! -4 பதக்கங்களை சுவீகரித்த மகாஜனா-

ஆசிரியர் - Editor II
தேசியமட்ட மெய்வல்லுநர் போட்டி!! -4 பதக்கங்களை சுவீகரித்த மகாஜனா-

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்துள்ளது. 

இப்போட்டியில் மகாஜனா ஒரு தங்கம், 3 வெள்ளி என 4 பதக்கங்களை சுவீகரித்து வழமை போன்று தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளது. 18 வயதுப்பிரிவு பெண்கள் கோலூன்றி பாய்தல் நிகழ்வில் சி.சுவர்ணா 3.20 மீற்றர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

20 வயதுப் பெண்கள் கோலூன்றிப்பாயதலில் ச.தீபிகா 3.00 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும், 20 வயதுப் ஆண்கள் கோலூன்றிப்பாயதலில் ஜெ.கஸ்மிதன் 3.90 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும், 18 வயதுப் ஆண்கள் கோலூன்றிப்பாயதலில் ச.துசாந்தன் 4.10 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

மேலும் 18 வயதுப் ஆண்கள் கோலூன்றிப்பாயதலில் ந.டன்சன் 3.80 மீற்றர் உயரம் தாண்டி வரணச்சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

குறித்த மாணவர்களின் வெற்றிகளுக்காக அரும்பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுநருமான திரு.சின்னையா சுபாஸ்கரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பங்களித்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு