வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

ஆசிரியர் - Editor II
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து தமிழகத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவலகள் தெரிவித்துள்ளன. இதையொட்டி தமிழகத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். இது வலுப்பெற்று நாளை மறுதினம் வியாழக்கிழமை புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது. நாளை புதன்கிழமை முதல் கனமழை தொடங்கி படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு