வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு மீனவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு..

யாழ்.வடமராட்சி கிழக்கில் அடாத்த தங்கியு ள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற் றக்கோரி வடமாகாணம் தழுவிய கதவடை ப்பு போராட்டத்திற்கு யாழ்.மாவட்ட மீனவர் சமாசங்களின் சம்மேளனம் அழைப்பு விடு த்திருக்கிறது.

வடமராட்சி கிழக்கில் கடலட்டை தொழிலு க்காக சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்ப குதி மீனவர்கள் அடாத்த தங்கியுள்ளார்க ள். இவர்களை வெளியேற்றுமாறுகோரி  வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சி யான கண்டன போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்கள் மற் றும் யாழ்.மாவட்ட மீனவர் சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து மேற்படி கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பி னை விடுத்துள்ளன.

இதன்படி எதிர்வரும் திங்கள் கிழமை வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் பூரண கதவடைப்பை மேற்கொள்ளும்படி யாழ்.மா வட்ட மீனவர் சமாசங்களின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு