வசூலில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்

ஆசிரியர் - Editor II
வசூலில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்

அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படம் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் மொத்தமாக 665 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி இதுவரை 665 கோடி ரூபா வசூல் குவித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபா வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.

இதுவரை கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழ்நாட்டில் சுமார் 175 கோடி ரூபா வரை வசூலித்து அதிகம் வசூல் குவித்த படம் என்ற பெயரோடு இருந்தது. அந்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்துள்ளது. வெளிநாடுகளில் பொன்னியின் செல்வன் 465 கோடி ரூபா வசூலித்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு