அதிகாலையில் வீடு உடைத்துக் கொள்ளையிட முயற்சி! 6 கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து மிக.. மிக.. சிறப்பாக கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் வீடு உடைத்துக் கொள்ளையிட முயற்சி! 6 கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து மிக.. மிக.. சிறப்பாக கவனித்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்...

புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில் நேற்று அதிகாலை 2.50 மணியளவில் வீடொன்றை உடைத்துக் கொள்ளையடிக்க முயற்சித்த 6 பேர் கொண்ட கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் கட்டிவைத்து சிறப்பாக கவனித்த பின்னர் ஊர்வலமாக கூட்டிச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீடொன்றை உடைத்துக் கொள்ளையிட முயற்சித்த நிலையில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதால் தப்பி ஓட முடியாமல் கொள்ளையர்கள் சிக்கியிருக்கின்றனர். 

பின்னர் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் மேலும் 3 பேர் கைது பிடிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடமிருந்து கோடரி, முகமூடி. கத்தி போன்ற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள் அரை நிர்வாணத்தில் கழுத்தில் கள்ளன் என பதாகை எழுதி தொங்கவிட்டு மந்துவிலில் இருந்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையம் வரையில் பிரதான வீதி வழியாக ஊர்வலமாக கூட்டிவந்து 

புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு