சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி

ஆசிரியர் - Editor II
சினிமாவை விட்டு விலகும் சாய் பல்லவி

முன்னணி கதாநாயகியாக உள்ள சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அவர். கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தனது சொந்த ஊர் கோயம்புத்தூரில் வைத்தியசாலை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்தவ படிப்பை முடித்தவர்.

படித்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிற்குள் வந்துள்ளார். இதனால், தற்போது தனது படிப்பை வீணடிக்க கூட என்று எண்ணியுள்ள சாய் பல்லவி வைத்தியசாலை கட்டி அதை கவனித்துள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு