தளபதியின் விஜய்யின் வாரிசு படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

ஆசிரியர் - Editor II
தளபதியின் விஜய்யின் வாரிசு படத்திற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அதன்பின்னர் பொலிஸார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இதுகுறித்து விசாரணை நடித்தினர். அப்போது யானையை வாகனத்தில் அழைத்து வர மட்டுமே அனுமதி கடிதத்தை படக்குழு சமர்ப்பித்ததாக தெரிகிறது.

படப்பிடிப்பில் யானையை பயன்படுத்தவதற்கான அனுமதி கடிதம் எங்களிடம் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்ததாகவும், ஆனால் அந்த கடிதத்தை அவர்கள் தரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

இதற்கிடையே யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து வந்ததாக படக்குழு தற்போது கூறியது. இதுதொடர்பாக உரிய ஆவனங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு