தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்!! -நியூஸிலாந்தை வென்றது இந்தியா-

ஆசிரியர் - Editor II
தாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்!! -நியூஸிலாந்தை வென்றது இந்தியா-

இந்தியா - நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2 ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 65 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது. 

அணிசார்பில் அதிகபடியாக சூர்யகுமார் யாதவ் 111 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சர்வதேச ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 2 ஆவது சதம் இதுவாகும்.

சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளுக்கு முகங்கொடுத்து, 11 நான்கு ஓட்டங்கள், 7 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 111 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் இசான் கிஷான் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இந்திய அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிம் சவுத்தி 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இப் போட்டியில் மொத்தமாக 11 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 18.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. 

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 61 ஓட்டங்களையும், டெவோன் கொன்வே 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு