உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் போது மது விற்க முழு தடை!!

ஆசிரியர் - Editor II
உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் போது மது விற்க முழு தடை!!

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள கட்டார் நாட்டில் உள்ள எட்டு மைதானங்களில் மது விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாடு இஸ்லாமிய நாடு என்ற அடிப்படையில், இந்த மது விற்பனை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும், 'விளையாட்டு மைதானங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில்' மதுபானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் நாளை 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டார் - ஈக்வடார் அணிகளின் ஆட்டத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

பீபாவின் முக்கிய அனுசரணையாளரான , பீர் தயாரிப்பு நிறுவனம், உலகக் கிண்ணப் போட்டிகளின்போது, பீர் விற்பனை செய்வதற்கான பிரத்தியேக உரிமைகளைக் கொண்டிருந்தது.

எனினும், போட்டிகளை நடத்தும் கட்டார் நாட்டு அதிகாரிகளுக்கும் பீஃபாவிற்கும் இடையே நடந்த விவாதங்களைத் தொடர்ந்து மைதானங்களில் மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும் கால்பந்து ஆதரவாளர்கள் சங்கம் இந்த முடிவை ஆட்சேபித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு