சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்காக ஐனாதிபதி வருகை..

ஆசிரியர் - Editor I
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்காக ஐனாதிபதி வருகை..

"சிறுவர்களைப் பாதுகாப்போம் " என்னும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்விற்காக எதிர் வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார்.

18ம் திகதி ஆரம்பமாகும் சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஓர் மாவட்டமான கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்ச்சி திட்ட ஆரம்பமானது கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியுடன் இதனுடன் தொடர்புடைய அமைச்சர்களும் பங்குகொண்டு குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு