கால்பந்து உலக கோப்பையை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

ஆசிரியர் - Editor II
கால்பந்து உலக கோப்பையை வெல்லும் அணிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

உலக கோப்பை கால்பந்தின் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணிக்கு மிகப் பெரும் பரிசுத் தொகையாக 342 கோடி ரூபா வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடாத்தப்பட்டு வருகின்றது. இறுதியாக உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் 2018 ஆம் ஆண்டு நடந்தது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கத்தாரில் ஆரம்பமாகவுள்ளது. டிசெம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் இப் போட்டிகள் நடக்கவுள்ளன. 

இந்த போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியின் பரிசு தொகை விவரம் வெளியாகி உள்ளது. மொத்த பரிசு தொகை 3586 கோடியாகும். இது கடந்த முறையை விட 328 கோடி கூடுதலாகும். 

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 342 கோடி பரிசாக கிடைக்கும். 2 ஆவது இடத்துக்கு 244 கோடி வழங்கப்படும். 3 ஆவது இடத்துக்கு 219 கோடியும், 4 ஆவது இடத்துக்கு 203 கோடியும் கிடைக்கும்.

கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா 138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா 73 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு