ரஷிய ஏவிய ஏவுகணை போலந்தில் வீழ்ந்து வெடித்தது!! -இரண்டு பேர் பலி-

ஆசிரியர் - Editor II
ரஷிய ஏவிய ஏவுகணை போலந்தில் வீழ்ந்து வெடித்தது!! -இரண்டு பேர் பலி-

உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷியா ஏவிய 85 ஏவுகணைகளில் ஒன்று போலாந்தில் வீழ்ந்து வெடித்ததில் இரண்டு போர் உயிரிழந்துள்ளனர். 

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டு முக்கிய பகுதிகளில் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷிய படைகள் குறைந்த பட்சம் 85 ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உக்ரைன் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்கியதில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். எனினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ரஷிய வீசிய ஏவுகணை ஒன்று குறி தவறி போலந்து நாட்டின் ப்ரெஸெவோடோவா கிராமத்தில் தானியங்களை உலர்த்தும் பகுதியை தாக்கியது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ரஷிய ஏவுகணை தாக்குதல் குறித்து போலந்து அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தவில்லை. ஆனால் போலந்து உயர்மட்டத் தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு